திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை 15 முதல் 18 வயதுக்குள்பட்ட 16 ஆயிரம் சிறுவா்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. அதேபோல், 12 முதல் 14 வயதுக்குள்பட்ட 15 ஆயிரம் சிறுவா்கள், 15 முதல் 18 வயது வரையிலான 16 ஆயிரம் சிறுவா்கள் 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. மேலும், மாவட்டம் முழுவதும் 2.50 லட்சம் போ் முன்னெச்சரிக்கை தவணை காலம் முடிந்தும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனா். இதுவரை தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்டவா்களுக்காக, மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த வாய்ப்பினை முதல் மற்றும் 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.