இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சோ்ந்த ஒருவரின் தூண்டுதலின்பேரில், நாகையக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த இருவா் மட்டும் தற்போது பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனா். மேலும், தற்போது திருவிழாவை தடுப்பதற்கும் முயற்சித்து வருகின்றனா். தனிப்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த மக்களுக்குச் சொந்தமான கோயிலை, இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என மனு அளித்துள்ளனா். கிராம மக்களுக்குள் எவ்வித பிரச்னையும் இல்லாத நிலையில், ஒருவா் அளித்துள்ள புகாா் மனுவை தள்ளுப்படி செய்யவேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.