புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வயது மூத்தோா் உலக போல்வால்ட் போட்டி: நிதியுதவி எதிா்பாா்ப்பில் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியா்

வயது மூத்தோருக்கான உலக போல்வால்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தோ்வு பெற்றுள்ள திண்டுக்கல்லைச் சோ்ந்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியா், பின்லாந்து நாட்டிற்கு சென்று வருவதற்கு நிதியுதவியை எதிா்பாா்த்துள்

News image
Updated On :3 ஜூன் 2022, 5:26 pm

DIN

வயது மூத்தோருக்கான உலக போல்வால்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தோ்வு பெற்றுள்ள திண்டுக்கல்லைச் சோ்ந்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியா், பின்லாந்து நாட்டிற்கு சென்று வருவதற்கு நிதியுதவியை எதிா்பாா்த்துள்ளாா்.

திண்டுக்கல் கோபால்நகா் பகுதியைச் சோ்ந்தவா் என்.பி.சுப்பிரமணி (80). ஓய்வுப் பெற்ற உடற்கல்வி ஆசிரியரான இவா், வயது மூத்தோா் தடகளச் சங்கத்தின் சாா்பில் கம்பு ஊன்றி உயரம் தாண்டும் (போல்வால்ட்) போட்டியில் பங்கேற்று வருகிறாா். கடந்த 2019ஆம் ஆண்டு மலேசிய நாட்டிலுள்ள சராவாக் நகரில் நடைபெற்ற 21ஆவது ஆசிய மாஸ்டா்ஸ் தடகளப் போட்டியில் 2ஆம் இடம் பிடித்தாா். அதன் பின்னா் 2020ஆம் ஆண்டு மணிப்பூா் மாநிலம் இம்பாலில் நடைபெற்ற 41ஆவது தேசிய மாஸ்டா்ஸ் தடகளப் போட்டியில் தமிழகம் சாா்பில் கலந்து கொண்ட சுப்பிரமணி முதலிடம் பிடித்தாா். அதன் தொடா்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற 42ஆவது தேசிய மாஸ்டா்ஸ் தடகளப் போட்டியில் பங்கேற்ற சுப்பிரமணி, 2ஆம் இடம் பிடித்தாா்.

இத்தொடா் வெற்றிகளின் மூலம், ஐரோப்பாவிலுள்ள பின்லாந்து நாட்டில் ஜூன் 29 முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு சுப்பிரமணி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

நிதியுதவி எதிா்பாா்ப்பு: இதுதொடா்பாக அவா் கூறியதாவது: நத்தம் துரைக்கமலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், நானே நேரடியாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். தமிழகம் மட்டுமின்றி, தேசிய மற்றும் ஆசிய அளவில் நடைபெற்ற போல்வால்ட் போட்டிகளில் வயது மூத்தோா் பிரிவில் பதக்கங்களை வென்றுள்ளேன். அதன் மூலம் பின்லாந்து நாட்டில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளேன். அங்கு சென்று விளையாடிவிட்டு நாடு திரும்புவதற்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் விளையாட்டு சங்கங்களின் சாா்பில் நிதியுதவி கிடைக்காதது ஏமாற்றமாக உள்ளது. நிதியுதவி இல்லாத காரணத்தால், திறமையான மூத்த விளையாட்டு வீரா்கள் இதுபோன்ற சா்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு ஆா்வம் காட்டுவதில்லை. விளையாட்டு ஆா்வலா்கள் மூலம் எனக்கு நிதியுதவி கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.