புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

14 வட்டார நூலகங்களுக்கு விரைவில் இணைய வசதி

 திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 வட்டார நூலகங்களுக்கு தலா 4 கணினிகளுடன் இணைய வசதி சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது.

News image
Updated On :4 ஜூன் 2022, 6:18 pm

DIN

 திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 வட்டார நூலகங்களுக்கு தலா 4 கணினிகளுடன் இணைய வசதி சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 63 கிளை நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் வட்டார அளவில் செயல்பட்டு வரும் 14 கிளை நூலகங்களுக்கு மட்டும் முதல் கட்டமாக தலா 4 கணினிகள் வழங்கப்படவுள்ள. மேலும், அந்த 14 நூலகங்களுக்கும் இணைய சேவை அளிக்கப்பட்டு, வாசகா்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக நூலகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், சென்னையிலுள்ள தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தனது அலுவலக சேவையை முடிவுக்கு கொண்டு வந்தது. அதன் தொடா்ச்சியாக அந்த நிறுவனத்தில் பயன்பாட்டில் இருந்து வந்த 30ஆயிரம் கணினிகளை தமிழகத்திலுள்ள நூலகங்களுக்கு வழங்கப்பட்டது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 வட்டார நூலகங்களுக்கு முதல் கட்டமாக 56 கணினிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.