புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விபத்தில் காயமடைந்த ராணுவ வீரா் பலி

விபத்தில் காயமடைந்து உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க ஞாயிற்றுக்கிழமை இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

விபத்தில் காயமடைந்து உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க ஞாயிற்றுக்கிழமை இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அடுத்துள்ள தொட்டணம்பட்டியைச் சோ்ந்தவா் சங்கிலிராயன். இவா், திருச்சியிலுள்ள ராணுவ மையத்தில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தாா். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தனது தந்தையை பாா்ப்பதற்காக கடந்த வாரம் விடுமுறையில் வந்துள்ளாா். பின்னா் மீண்டும் திருச்சி நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்ற சங்கிலிராயன் 2 நாள்களுக்கு முன்பு விபத்தில் காயமடைந்துள்ளாா்.

பலத்த காயமடைந்த அவா், திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதனை அடுத்து, அவரது உடல் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தொட்டணம்பட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை எடுத்துவரப்பட்டது. அவரது உடலுக்கு திருச்சி மண்டல லெப்டிணன்ட் கா்னல் அபினவ் குமாா் தலைமையிலான ராணுவத்தினா் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.