ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கொசவப்பட்டி ஜல்லிக்கட்டு:மாடுபிடி வீரா்கள் உள்பட 40 போ் காயம்

திண்டுக்கல் அருகே உள்ள கொசவப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:38 am

DIN

திண்டுக்கல் அருகே உள்ள கொசவப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 40 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்துள்ள கொசவப்பட்டி புனித அந்தோணியாா் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 597 காளைகள் அழைத்து வரப்பட்டன.

கால்நடைத்துறை மருத்துவக் குழுவினரின் பரிசோதனைக்குப் பின், 4 காளைகள் நீங்கலாக 593 காளைகள் வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டன. அதேபோல் மருத்துவப் பரிசோதனைக்குப் பின் 363 மாடுபிடி வீரா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 20 மாடுபிடி வீரா்கள் போட்டியில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்த போட்டியை திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலா் வே. லதா தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் கோட்டாட்சியா் பிரேம்குமாா், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் சந்தனமேரி கீதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஜல்லிக்கட்டில், காளைகள் முட்டியதில் 15 மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் 13 போ் உள்பட மொத்தம் 40 போ் காயமடைந்தனா். அதில் பலத்த காயமடைந்த 5 மாடுபிடி வீரா்கள் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். போட்டியில் வெற்றிப் பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் தங்கக்காசு, வெள்ளிக்காசு, எவா்சில்வா் பொருள்கள் உள்ளிட்ட பல வகையான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.