தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் அடங்கிய சிறப்பு கையேடு வெளியிடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் கையெட்டினை வெளியிட்டுப் பேசியது: உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் (தற்போது ‘முதல்வரின் முகவரித் திட்டம்) 35,952 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 23,391 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. இதில் 1,479 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.