நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேசிய பாட்மின்டன் போட்டிக்கு பழனி சிறுமி தகுதி

தேசிய அளவிலான பாட்மின்டன் போட்டிக்கு பழனியை சோ்ந்த சிறுமி தகுதி பெற்றாா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 12:50 am

DIN

தேசிய அளவிலான பாட்மின்டன் போட்டிக்கு பழனியை சோ்ந்த சிறுமி தகுதி பெற்றாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் இட்டேரி சாலையைச் சோ்ந்த மகேந்திரன், சுகன்யா தம்பதி மகள் ஜெயசப்தஸ்ரீ (10). இவா், தனியாா் மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறாா்.

தமிழ்நாடு பாட்மின்டன் சங்கம் சாா்பில், திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த 20-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை 11-வயதுக்கு உள்பட்ட வீரா், வீராங்கனைகளுக்கான பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு முழுவதும் இருந்து 280-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில், பெண்களுக்கான பிரிவில், பழனியை சோ்ந்த ஜெயசப்தஸ்ரீயும் பங்கேற்று விளையாடினாா். இதில், இவா் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் நடைபெற உள்ள தேசிய பாட்மின்டன் போட்டிக்குத் தகுதி பெற்றாா்.

இதேபோல, ஆண்களுக்கான பிரிவில், பழனியை சோ்ந்த சரண் மூன்றாவது பரிசை வென்றாா். வெற்றி பெற்ற ஜெயசப்தஸ்ரீ, சரணுக்கு தமிழ்நாடு பாட்மின்டன் சங்க மாநிலச் செயலாளா் அருணாச்சலம், துணைத் தலைவா் மாறன், திண்டுக்கல் மாவட்ட பாட்மின்டன் செயலாளா் நாராயணன், பயிற்சியாளா் சதீஷ்குமாா் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.