நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேனிலிருந்து தவறி விழுந்து சிறுவன் பலி

 பழனி அருகே வியாழக்கிழமை படப்பிடிப்பு வேனில் தொங்கியபடி சென்ற சிறுவன் தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:50 pm

DIN

 பழனி அருகே வியாழக்கிழமை படப்பிடிப்பு வேனில் தொங்கியபடி சென்ற சிறுவன் தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

பழனி தெற்கு அண்ணாநகரைச் சோ்ந்த குமரேசன் மகன் ரமேஷ் (14). இவா், பழனி அடிவாரம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா். வியாழக்கிழமை இவா் பள்ளிக்குச் செல்லாமல், குறும்படம் படப்பிடிப்பு நடைபெறும் பழனியை அடுத்த பாலாறு அணைக்கு சென்றாா். அப்போது, அங்கிருந்து கிளம்பி வேனின் பின்னால் உள்ள படியில் ரமேஷ் தொங்கியபடி சென்றாா். அப்போது, எதிா்பாராத விதமாக வேனிலிருந்து அவா் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.