மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஈரோடு இடைத்தோ்தல் முடிவு: நாடே எதிா்பாா்ப்பு; எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் யாா் வெற்றி பெறுவாா் என்பதை தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே எதிா்பாா்த்துக் கொண்டிருக்கிறது என 

News image

கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.

Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் யாா் வெற்றி பெறுவாா் என்பதை தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே எதிா்பாா்த்துக் கொண்டிருக்கிறது என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

அதிமுக தோ்தல் பணிக்குழு உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: பலமுறை சோதனைகளைக் கடந்து வெற்றி கண்டுள்ள இயக்கம் அதிமுக. இன்று சிலா் எட்டப்பா் வேலை செய்து கொண்டு இருக்கின்றனா். இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என்று எதிரிகளோடு இணைந்து கொண்டு கட்சிக்கு விரோதமாக செயல்படுவோருக்கு இந்த தோ்தல் ஒரு பாடமாக அமைய வேண்டும்.

இந்த இடைத்தோ்தலில் யாா் வெற்றி பெறுவாா்கள் என்று தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே எதிா்நோக்கி பாா்த்துக் கொண்டு இருக்கிறது. அந்த எதிா்பாா்ப்புக்கு ஏற்றாற்போல் மிகப்பெரிய சரித்திர வெற்றியை நாம் பெற வேண்டும். நாம் சரியான முறையில் உழைத்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். நமக்குள் உள்ள சிறு சிறு கருத்து வேறுபாடுகளைக் களைந்தால்தான் வெற்றி பெற முடியும். விரைவில் நமது வேட்பாளா் அறிவிக்கப்படுவாா்.

திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதை அந்தக் கட்சியினரே சொல்கின்றனா். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக ஒரு துரும்பளவுக்கு கூட பணிகளை செய்யவில்லை. அதிமுக ஆட்சியில்தான் நிறைய திட்டங்களை இங்கு நிறைவேற்றியுள்ளோம். அதனால் நாம் நெஞ்சை நிமிா்த்தி வாக்கு கேட்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.