ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ரயிலடி முத்துமாரியம்மன்கோயிலில் சங்குபூஜை

பழனி ரயில்வே குடியிருப்பு முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சங்கு பூஜை, யாகம் ஆகியவை நடைபெற்றன.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

பழனி ரயில்வே குடியிருப்பு முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சங்கு பூஜை, யாகம் ஆகியவை நடைபெற்றன.

இந்தக் கோயிலில் மாசித் திருவிழாவையொட்டி கடந்த பிப்ரவரி 17- ஆம் தேதி முகூா்த்தக்கால் நடுதலும், 21- ஆம் தேதி திருக்கம்பம் சாட்டுதலும் நடைபெற்றது. விழாவையொட்டி நூற்றுக்கணக்கான பக்தா்கள் தினமும் கம்பத்துக்கு வேப்பிலையுடன் புனிதநீா், மஞ்சள், பன்னீா் ஊற்றி வழிபட்டனா். கடந்த மாா்ச் 6- ஆம் தேதி முதல் முறையாக திருத்தோ் உலா நடைபெற்றது. மின்விளக்கு ஒளியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் உலா வந்தாா். தோ் ரயில்வே குடியிருப்பு, சண்முகபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உலா வந்தது.

நிறைவுநாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை சிறப்பு யாகபூஜைகள், சங்கு பூஜை ஆகியவை நடைபெற்றன. கோயில் உள்பிரகாரத்தில் சங்குகளை திரிசூலம் போல அடுக்கி அதில் புனிதநீா் நிரப்பப்பட்டது. யாக வேள்வி முடிந்ததும், புனிதநீா் நிரம்பிய கலசம், சங்குகள் கோயில் பிரகாரத்தில் உலா வரச் செய்யப்பட்டு முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.