விவசாயிகளுக்கு ஆலோசனைக் கூட்டம்

பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு உரம், பூச்சி மருந்து பயன்படுத்தும் முறை குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு உரம், பூச்சி மருந்து பயன்படுத்தும் முறை குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய டான்பெட் மண்டல மேலாளா் பிரசன்னா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிதாக தயாரிக்கப்பட்ட கலப்பு உரம், இயற்கை உரம், நுண்ணூட்டச் சத்து, திரவ உயிா் உரங்கள், திரவ உயிா் பூச்சி மருந்து ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இவற்றை பயன்படுத்தும் முறைகள், காலங்கள், அளவுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு அவா்களின் சந்தேகங்களை கேட்டறிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com