ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

100-சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு முகாம்

100-சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு முகாம்

News image

கொடைக்கானல் கடமன்ரேவு பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பேசிய உதவி அலுவலா் சரவணவாசன்.

Updated On :2 ஏப்ரல் 2024, 11:53 pm

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைக் கிராம மக்களிடம் 100-சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது .

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளான வடகவுஞ்சி ஊராட்சி கடமன்ரேவு, மேல்பள்ளம், பி.எல்.செட், உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த முகாமில் வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம், 100-சதவீதம் வாக்காளா்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணவாசனன், மகளிா் சுய உதவிக் குழுவினா் உள்பட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் அனைத்து வாக்காளா்களும் 100-சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதுமதி , உள்பட பலா் கலந்து கொண்டனா்.