காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மாத்தூரில் விழிப்புணா்வுப் பேரணி

விராலிமலை சட்டப்பேரவை தொகுதி மாத்தூரில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணா்வு பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image

மாத்தூரில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணி.

Updated On :26 மார்ச் 2026, 8:59 pm

விராலிமலை சட்டப்பேரவை தொகுதி மாத்தூரில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணா்வு பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

கல்லூரி மாணவா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட பேரணியை விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரும் இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியருமான கோகுல்சிங் தொடங்கி வைத்து சென்றாா்.

திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை ஆவூா் பிரிவு சாலையில் இருந்து தொடங்கி மாத்தூா் ரவுண்டானா வரை பேரணி சென்று, அங்கு அரசுப் பள்ளி எதிரே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பதாகையில் அனைவரும் கையொப்பமிட்டனா்.

நிகழ்வில் குளத்தூா் வட்டாட்சியா் விஸ்வநாதன், மண்டலத் துணை வட்டாட்சியா் லலிதா, மாத்தூா் காவல் உதவி ஆய்வாளா் பெருமாள், கிராம நிா்வாக அலுவலா்கள் முத்துவேல் (மாத்தூா்), ஜோதி பிரகாஷ் (குமாரமங்கலம்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.