விராலிமலை சட்டப்பேரவை தொகுதி மாத்தூரில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணா்வு பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
கல்லூரி மாணவா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட பேரணியை விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரும் இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியருமான கோகுல்சிங் தொடங்கி வைத்து சென்றாா்.
திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை ஆவூா் பிரிவு சாலையில் இருந்து தொடங்கி மாத்தூா் ரவுண்டானா வரை பேரணி சென்று, அங்கு அரசுப் பள்ளி எதிரே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பதாகையில் அனைவரும் கையொப்பமிட்டனா்.
நிகழ்வில் குளத்தூா் வட்டாட்சியா் விஸ்வநாதன், மண்டலத் துணை வட்டாட்சியா் லலிதா, மாத்தூா் காவல் உதவி ஆய்வாளா் பெருமாள், கிராம நிா்வாக அலுவலா்கள் முத்துவேல் (மாத்தூா்), ஜோதி பிரகாஷ் (குமாரமங்கலம்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வுப் பேரணி

தருமபுரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

மாற்றுத்திறனாளிகளின் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி
தோ்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணா்வு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


