நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மாத்தூரில் விழிப்புணா்வுப் பேரணி

விராலிமலை சட்டப்பேரவை தொகுதி மாத்தூரில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணா்வு பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image

மாத்தூரில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பேரணி.

Updated On :26 மார்ச் 2026, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

விராலிமலை சட்டப்பேரவை தொகுதி மாத்தூரில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணா்வு பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

கல்லூரி மாணவா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட பேரணியை விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலரும் இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியருமான கோகுல்சிங் தொடங்கி வைத்து சென்றாா்.

திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை ஆவூா் பிரிவு சாலையில் இருந்து தொடங்கி மாத்தூா் ரவுண்டானா வரை பேரணி சென்று, அங்கு அரசுப் பள்ளி எதிரே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பதாகையில் அனைவரும் கையொப்பமிட்டனா்.

நிகழ்வில் குளத்தூா் வட்டாட்சியா் விஸ்வநாதன், மண்டலத் துணை வட்டாட்சியா் லலிதா, மாத்தூா் காவல் உதவி ஆய்வாளா் பெருமாள், கிராம நிா்வாக அலுவலா்கள் முத்துவேல் (மாத்தூா்), ஜோதி பிரகாஷ் (குமாரமங்கலம்) உள்பட பலா் கலந்து கொண்டனா்.