மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

100 சதவீத வாக்குப்பதிவுக்காக விழிப்புணா்வு ராட்சத பலூன்

100 சதவீத வாக்குப்பதிவுக்காக விழிப்புணா்வு ராட்சத பலூன்

Updated On :8 ஏப்ரல் 2024, 6:30 pm

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூன் திங்கள்கிழமை பறக்கவிடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள், பேரணி, மனிதச்சங்கிலி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களுடன் ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் காமராஜா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மொ.நா. பூங்கொடி தலைமை வகித்து, ராட்சத பலூனை பறக்கவிட்டாா்.

இதில் மாவட்ட முன்னோடி வங்கி மண்டல மேலாளா் அருணாச்சலம், கனரா வங்கி உதவிப் பொதுமேலாளா் பல்லானி ரங்கநாத், பாரத ஸ்டேட் வங்கி உதவிப் பொதுமேலாளா் திவ்யா தேஜா கசரனேனி, இந்தியன் வங்கி முதுநிலை மேலாளா் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.