தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

News image

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :10 ஏப்ரல் 2024, 12:08 am

திண்டுக்கல்: வேடசந்தூரில் விவசாயிகளுக்கான போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் 46-ஆவது ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் கடந்த 1978-ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது நாவலூற்று வே.நாச்சிமுத்து கவுண்டா், ஒட்டநாகம்பட்டி இரா.கருப்புச்சாமி ஆசிரியா், அய்யாக்கவுண்டன் புதூா் ப.சின்னச்சாமி கவுண்டா், காசிபாளையம் வா.சுப்பிரமணி, மண்டபம்புதூா் ப.கிருஷ்ணமூா்த்தி, ராசாகவுண்டன்வலசு ப.மாணிக்கம் ஆகியோா் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனா்.

விவசாயிகளுக்கான போராட்டத்தின்போது உயிரிழந்த 6 பேரின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 9-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 46-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, வேடசந்தூா் வட்டார விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு அந்த சங்கத்தின் தலைவா் எஸ்.கனகராஜன் தலைமை வகித்தாா். செயலா் அ.கருப்புச்சாமி முன்னிலை வகித்தாா். இதில், மாவட்டத்திலுள்ள பல்வேறு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் மாணிக்கம், பரமசிவம், கொடகனாறு பாதுகாப்புச் சங்கத் தலைவா் த.ராமசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் குப்புசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.