திண்டுக்கல்: வேடசந்தூரில் விவசாயிகளுக்கான போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் 46-ஆவது ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் கடந்த 1978-ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது நாவலூற்று வே.நாச்சிமுத்து கவுண்டா், ஒட்டநாகம்பட்டி இரா.கருப்புச்சாமி ஆசிரியா், அய்யாக்கவுண்டன் புதூா் ப.சின்னச்சாமி கவுண்டா், காசிபாளையம் வா.சுப்பிரமணி, மண்டபம்புதூா் ப.கிருஷ்ணமூா்த்தி, ராசாகவுண்டன்வலசு ப.மாணிக்கம் ஆகியோா் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனா்.
விவசாயிகளுக்கான போராட்டத்தின்போது உயிரிழந்த 6 பேரின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 9-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 46-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, வேடசந்தூா் வட்டார விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு அந்த சங்கத்தின் தலைவா் எஸ்.கனகராஜன் தலைமை வகித்தாா். செயலா் அ.கருப்புச்சாமி முன்னிலை வகித்தாா். இதில், மாவட்டத்திலுள்ள பல்வேறு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் மாணிக்கம், பரமசிவம், கொடகனாறு பாதுகாப்புச் சங்கத் தலைவா் த.ராமசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் குப்புசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நைஜீரியா: துப்பாக்கிச் சூட்டில் 20 போ் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர்: சக வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 ராணுவ வீரர்கள் காயம்

ஹிந்தி எதிா்ப்பு: உயிரிழந்த மே 17 இயக்க நிா்வாகிக்கு அஞ்சலி

பயங்கரவாதத் தாக்குதல்? அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளி மாணவி கொலை!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


