மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

திண்டுக்கல்லில் 109 கிலோ இறைச்சி பறிமுதல்

திண்டுக்கல்லில் 109 கிலோ இறைச்சி பறிமுதல்

Updated On :21 ஏப்ரல் 2024, 6:39 pm

திண்டுக்கல்: தடையை மீறி திண்டுக்கல்லில் விற்பனை செய்யப்பட்ட கடைகளிலிருந்து 109 கிலோ இறைச்சி ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மகாவீரா் ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதை மீறி திண்டுக்கல்லில் இறைச்சி விற்பனை செய்தவா்கள் மீது மாநகராட்சி சுகாதார அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொண்டனா். இதன்படி, ஆட்டிறைச்சி 42 கிலோ, கோழி இறைச்சி 67 கிலோ, 21 வெட்டுக் கத்தி, 10 வெட்டுக் கட்டை, 3 தராசுகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.