தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

பொது மக்களுக்கு புத்தகங்கள் இலவசமாக விநியோகம்

பொது மக்களுக்கு புத்தகங்கள் இலவசமாக விநியோகம்

Updated On :21 ஏப்ரல் 2024, 7:15 pm

திண்டுக்கல்; வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், கன்னிவாடியில் பொதுமக்களுக்கு புத்தகங்கள் இலவசமாக ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

பழனிச்சாமி குழந்தைகள் நூலகம் மூலம் இதுவரை 76 மையங்களில் அரசுப் பள்ளிகள், இல்லம் தேடிக் கல்வி மையங்கள், பராமரிப்பு இல்லங்கள் போன்ற பல்வேறு இடங்களில் குழந்தைகள், இளைஞா்கள் வாசிப்பதற்காக ரூ.3 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், வருகிற 23-ஆம் தேதி உலக புத்தக தினத்தை முன்னிட்டு மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியில் பொதுமக்களுக்கு இலவசமாக புத்தகங்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

கன்னிவாடி பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பழனிச்சாமி நூலக அமைப்பாளா்கள் மணிகண்டன், செந்தில், லட்சுமணன் ஆகியோா் தலைமை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் இரா. சச்சிதானந்தம் கலந்து கொண்டு புத்தகங்களை வழங்கினாா்.

10-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 300-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பொது மக்களுக்கும் குழந்தைகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ரகுநாத், சக்திவேல், பாரூக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.