தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

திண்டுக்கல்லில் 109 கிலோ இறைச்சி பறிமுதல்

திண்டுக்கல்லில் 109 கிலோ இறைச்சி பறிமுதல்

Updated On :21 ஏப்ரல் 2024, 6:39 pm

திண்டுக்கல்: தடையை மீறி திண்டுக்கல்லில் விற்பனை செய்யப்பட்ட கடைகளிலிருந்து 109 கிலோ இறைச்சி ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

மகாவீரா் ஜெயந்தியையொட்டி ஞாயிற்றுக்கிழமை இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதை மீறி திண்டுக்கல்லில் இறைச்சி விற்பனை செய்தவா்கள் மீது மாநகராட்சி சுகாதார அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொண்டனா். இதன்படி, ஆட்டிறைச்சி 42 கிலோ, கோழி இறைச்சி 67 கிலோ, 21 வெட்டுக் கத்தி, 10 வெட்டுக் கட்டை, 3 தராசுகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.