பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

திருவிழா நடத்த இடையூறு செய்வதாக புகாா்

திருவிழா நடத்த இடையூறு செய்வதாக புகாா்

News image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த டொக்குவீரன்பட்டி கிராம மக்கள்.

Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

திண்டுக்கல்: வேடசந்தூா் அருகே கோயில் திருவிழா நடத்துவதற்கு இடையூறாக உள்ள சிலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுமக்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த டொக்குவீரன்பட்டி கிராம மக்கள் கூறியதாவது:

எங்கள் கிராமத்தில் காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் ஆகிய தெய்வங்களுக்கான கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வழிபாடு நடத்துவதற்கும், திருவிழா நடத்துவதற்கும் சிலா் இடையூறு செய்கின்றனா். இதனால், கடந்த 5 ஆண்டுகளாக திருவிழா நடத்த முடியாத நிலை உள்ளது. இதுதொடா்பாக வட்டாட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டபோது, பிரச்னை ஏற்படுத்த மாட்டோம் என உறுதியளித்துச் சென்றனா். ஆனால், அதற்கு மாறாக தற்போதும் இடையூறு செய்கின்றனா்.

எனவே, இடையூறாக உள்ள அந்த நபா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, எங்கள் கிராம மக்கள் ஒன்றிணைந்து திருவிழா நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.