ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு அளிக்க வந்த வீரசின்னம்பட்டி கிராமத்தினா்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு அளிக்க வந்த வீரசின்னம்பட்டி கிராமத்தினா்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

திண்டுக்கல்: சாணாா்பட்டி அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த வீரசின்னம்பட்டியைச் சோ்ந்த கிராம மக்கள் சாா்பில், திருவிழா நடத்தும் குழுவினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது:

வீரசின்னம்பட்டி கோட்டை கருப்பணசாமி கோயில் திருவிழா, மே மாதம் 3-ஆவது வாரம் நடைபெறுகிறது. இதையொட்டி, மே 26-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு கிராம மக்கள் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com