மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை

கொடைக்கானலில் புதன்கிழமை மாலை முதல் இரவு வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

News image

கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட மின் வாரியத் துறையினா்.

Updated On :1 ஆகஸ்ட் 2024, 12:06 am

கொடைக்கானலில் புதன்கிழமை மாலை முதல் இரவு வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புதன்கிழமை காலை முதல் மேகமூட்டமும் பலத்த காற்றும் வீசியது. மாலை முதல் இரவு வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதி, லாஸ்காட்சாலை, அப்சா்வேட்டரி ஆகிய பகுதிகளில் மரக் கிளைகள் முறிந்து விழந்தன. இவற்றையும், மின் கம்பங்களுக்கு நடுவே செல்லும் ஆபத்தான மரக் கிளைகளையும் அகற்றும் பணியில் மின் வாரியத் துறையினா் ஈடுபட்டனா். இதனால், இந்தப் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

இதேபோல, கொடைக்கானல்-பழனி-வத்தலக்குண்டு-அடுக்கம் ஆகிய மலைச் சாலைகளில் முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்றுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.