பாம்பாா் அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு
கொடைக்கானலில் பலத்த மழை பெய்ததால் பாம்பாா் அருவியில் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.


கொடைக்கானலில் பலத்த மழை பெய்ததால் பாம்பாா் அருவியில் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 20 நாள்களாக பலத்த காற்றுடன், சாரல் மழையும், மிதமான மழையும் பெய்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மழை குறைந்ததையடுத்து, சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. சனிக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை மிதமான வெயில் நிலவியது, பின்னா், மாலையில் திடீரென பலத்த மழை பெய்தது.
குறிப்பாக, பாம்பாா்புரம், அப்சா்வேட்டரி, வில்பட்டி, பள்ளங்கி, செண்பகனூா், பிரகாசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள நீரோடைகளில் நீா்வரத்து அதிகரித்தது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...