தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பழனி கோயிலில் பக்தா்கள் கூட்டம்

பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 7:00 pm

Din

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

கிரிவீதியில் ரோப்காா், வின்ச் நிலையங்களில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். மின்கல வாகனங்களில் இடமில்லாததால், பலரும் கிரிவீதியில் நடந்து சென்றனா்.

மலைக்கோயிலில் கட்டண தரிசன வரிசை, இலவச தரிசன வரிசையில் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

மலைக் கோயிலில் வழக்கம் போல குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டது. அன்னதான விருந்திலும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சுகாதாரம், குடிநீா் வசதிகளை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா். இரவு வேளையில் தங்கத் தோ் புறப்பாடு நடைபெற்றது.