ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் பூசணிக்காய், சுரைக்காய் விலை சரிவு

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் பூசணிக்காய், சுரைக்காய் விலை வீழ்ச்சியடைந்தன.

News image
ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு புதன்கிழமை விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பூசணிக்காய்.
Updated On :28 ஆகஸ்ட் 2024, 6:52 pm

Din

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் பூசணிக்காய், சுரைக்காய் விலை வீழ்ச்சியடைந்தன.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு தினந்தோறும் தக்காளி, முருங்கை, பீட்ரூட், கொத்தவரை, வெண்டைக்காய், பூசணிக்காய், சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு விற்பனைக்கு வரும் காய்கறிகளை கேரளா வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்கின்றனா்.

இந்த நிலையில், சந்தைக்கு புதன்கிழமை பூசணிக்காய், சுரைக்காய் வரத்து அதிகரித்ததால், இவற்றின் விலை கடும் வீழ்ச்சியடைந்தன.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ரூ.26-க்கு விற்ற பூசணிக்காய் தற்போது ரூ.7 -க்கும், ரூ.16-க்கு விற்ற சுரைக்காய் ரூ.2-க்கும் விற்பனையானது. இதனால், பூசணிக்காய், சுரைக்காய் விவசாயிகள் கவலை அடைத்துள்ளனா்.