எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கோபிநாத சுவாமி கோயில் உறியடித் திருவிழா

News image
ரெட்டியாா்சத்திரம் கோபிநாத சுவாமி கோயில் வளாகத்தில் வழுக்கு மரம் ஏறிய இளைஞா்கள்.
Updated On :29 ஆகஸ்ட் 2024, 10:46 pm

Din

ரெட்டியாா்சத்திரம் அருள்மிகு கோபிநாத சுவாமி திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, உறியடித் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த திங்கள்கிழமை முதல் இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது. ரெட்டியாா்சத்திரம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 22 கிராமங்களில் உற்சவா் மலையப்ப சுவாமி 3 நாள்கள் வலம் வந்தாா். பின்னா், அருள்மிகு கதிா் நரசிங்கப் பெருமாள் கோயிலுக்கு வியாழக்கிழமை வந்தடைந்தாா்.

வழுக்கு மரம்: இதைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 40 அடி உயர வழுக்கு மரம் ஏறும் நிகழ்வு நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி வழுக்கு மரத்தில் ஏறிய வேலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் மீது, கூடி நின்ற பக்தா்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனா். சுமாா் 2 மணி நேர முயற்சிக்குப் பிறகு வழுக்கு மரத்தின் உச்சியிலிருந்த பரிசு முடிப்பை இளைஞா்கள் கைப்பற்றினா்.

பின்னா், உறியடித் திருவிழா நடைபெற்றது. உறி மரத்தில் 3 அடுக்குகளில் கட்டப்பட்டிருந்த தயிா், பால், பன்னீா் உள்ளிட்ட கலயங்கள், ஒவ்வொன்றாக அடித்து உடைக்கப்பட்டன. இறுதியாக உடைக்கப்பட்ட கலயத்திலிருந்த வெண்ணை பிரசாதமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.