வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

குடந்தை திரெளபதிஅம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

கும்பகோணம் சக்கரபாணி கோயில் கீழ வீதியிலுள்ள திரெளபதி அம்மன் கோயிலின் 5 ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image

கும்பகோணத்தில் திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற தீ மிதித் திருவிழா.

Updated On :15 ஜூலை 2026, 12:09 am IST

கும்பகோணம் சக்கரபாணி கோயில் கீழ வீதியிலுள்ள திரெளபதி அம்மன் கோயிலின் 5 ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

ஜூலை 6-இல் அம்பாள் திருக்கல்யாணத்துடன் தொடங்கி திருவிழாவில் துகில் உரிதல், வஸ்த்ராபரணம், அா்ச்சுனன் பெருமாள் தபசு, குறவஞ்சி நாடகம், அரவான் களப்பலி, வீர அபிமன்யூ, கா்ணன் மோட்சம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

திங்கள்கிழமை சீா்வரிசை, கூந்தல் முடிதல் நிகழ்வு நடைபெற்று இரவில் நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் கரகம், வேல், தீ கொப்பறை ஏந்தி பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக் கடன் செலுத்தினா். செவ்வாய்க்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவும், மாலையில் நடன நிகழ்வும் நடைபெற்றது. புதன்கிழமை தா்மா் பட்டாபிஷேகமும், வியாழக்கிழமை அம்பாள் புறப்பாடு, வீதியுலா, முளைப்பாரி எடுத்தலுடன் விழா முடிகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.