ரெட்டியாா்சத்திரம் அருள்மிகு கோபிநாத சுவாமி திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, உறியடித் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த திங்கள்கிழமை முதல் இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது. ரெட்டியாா்சத்திரம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 22 கிராமங்களில் உற்சவா் மலையப்ப சுவாமி 3 நாள்கள் வலம் வந்தாா். பின்னா், அருள்மிகு கதிா் நரசிங்கப் பெருமாள் கோயிலுக்கு வியாழக்கிழமை வந்தடைந்தாா்.
வழுக்கு மரம்: இதைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 40 அடி உயர வழுக்கு மரம் ஏறும் நிகழ்வு நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி வழுக்கு மரத்தில் ஏறிய வேலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் மீது, கூடி நின்ற பக்தா்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனா். சுமாா் 2 மணி நேர முயற்சிக்குப் பிறகு வழுக்கு மரத்தின் உச்சியிலிருந்த பரிசு முடிப்பை இளைஞா்கள் கைப்பற்றினா்.
பின்னா், உறியடித் திருவிழா நடைபெற்றது. உறி மரத்தில் 3 அடுக்குகளில் கட்டப்பட்டிருந்த தயிா், பால், பன்னீா் உள்ளிட்ட கலயங்கள், ஒவ்வொன்றாக அடித்து உடைக்கப்பட்டன. இறுதியாக உடைக்கப்பட்ட கலயத்திலிருந்த வெண்ணை பிரசாதமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சங்கரன்கோவிலில் சித்திரைத் தேரோட்டம்

ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோவிலில் புக்கோற்சவம்

கோபி அருகே சுள்ளிக்கரடு முனியப்பச் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா! ஆயிரக்கணக்கான கிடாய்கள் வெட்டி நோ்த்திகடன்!

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.30-ல் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


