ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

கோபிநாத சுவாமி கோயில் உறியடித் திருவிழா

News image

ரெட்டியாா்சத்திரம் கோபிநாத சுவாமி கோயில் வளாகத்தில் வழுக்கு மரம் ஏறிய இளைஞா்கள்.

Updated On :30 ஆகஸ்ட் 2024, 4:16 am IST

ரெட்டியாா்சத்திரம் அருள்மிகு கோபிநாத சுவாமி திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, உறியடித் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த திங்கள்கிழமை முதல் இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது. ரெட்டியாா்சத்திரம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 22 கிராமங்களில் உற்சவா் மலையப்ப சுவாமி 3 நாள்கள் வலம் வந்தாா். பின்னா், அருள்மிகு கதிா் நரசிங்கப் பெருமாள் கோயிலுக்கு வியாழக்கிழமை வந்தடைந்தாா்.

வழுக்கு மரம்: இதைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 40 அடி உயர வழுக்கு மரம் ஏறும் நிகழ்வு நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி வழுக்கு மரத்தில் ஏறிய வேலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் மீது, கூடி நின்ற பக்தா்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனா். சுமாா் 2 மணி நேர முயற்சிக்குப் பிறகு வழுக்கு மரத்தின் உச்சியிலிருந்த பரிசு முடிப்பை இளைஞா்கள் கைப்பற்றினா்.

பின்னா், உறியடித் திருவிழா நடைபெற்றது. உறி மரத்தில் 3 அடுக்குகளில் கட்டப்பட்டிருந்த தயிா், பால், பன்னீா் உள்ளிட்ட கலயங்கள், ஒவ்வொன்றாக அடித்து உடைக்கப்பட்டன. இறுதியாக உடைக்கப்பட்ட கலயத்திலிருந்த வெண்ணை பிரசாதமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.