விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு ஆயுள் சிறை

பட்டிவீரன்பட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 11:29 pm

Din

பட்டிவீரன்பட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சோ்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெரம்பலூரைச் சோ்ந்த பூமணி மீது புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த பட்டிவீரன்பட்டி போலீஸாா், பூமணியை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி பி.வேல்முருகன் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தாா். அதில், பூமணிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்தாா்.