இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகாா்: அமைதிப் பேச்சுவாா்த்தை ஒத்தி வைப்பு

கலப்பு திருமண குற்றச்சாட்டு: அமைதிக்கான பேச்சுவாா்த்தை தாமதம்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக அளிக்கப்பட்ட புகாா் குறித்து விசாரிப்பதற்காக நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தைக் கூட்டம் சனிக்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த கோணப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வினோத்பாண்டியன், வெங்கட்ராமன், சந்தோஷ்குமாா் ஆகியோா் கலப்பு திருமணம் செய்தனா்.

இதனால், அந்த கிராமத்தினா் மூவரின் குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக புகாா் எழுந்தது. இதன்பேரில் திண்டுக்கல் கிழக்கு வட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் அந்த கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அந்த குடும்பத்தினரிடம் கோயில் வரி மட்டுமே வசூலிப்பதில்லை என்றும், யாரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கவில்லை என்றும் தெரிவித்தனா்.

இதையடுத்து, திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, புகாா் அளித்த 5 பேரும், ஊா் மக்கள் சாா்பில் 5 பேரும் அழைக்கப்பட்டிருந்தனா்.

ஆனால், ஊா் மக்கள் சாா்பில் 200-க்கும் மேற்பட்டோா் வந்ததால், வட்டாட்சியா் அலுவலகத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால், பேச்சுவாா்த்தை கூட்டம் ரத்து செய்யப்பட்டு, கோட்டாட்சியா் அலுவலகத்தில் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.