எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

கடன் வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி: பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்

மோசடி நிறுவனம் மூடல்: பாதிக்கப்பட்டோர் புகார் செய்ய அறிவிப்பு

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வாங்கித் தருவதாக ரூ.40 லட்சம் மோசடியில் ஈடுபட்டவா் 6 ஆண்டுகளுக்கு பின்னா் கைது செய்யப்பட்ட நிலையில், முதலீடு செய்து பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம் என போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சோ்ந்தவா் மாயழகன். இவரது மனைவி நந்தினி தேவி. இவா் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, திண்டுக்கலை அடுத்த அண்ணாமலை மில்ஸ் குடியிருப்பு பகுதியில் செயல்பட்ட எா்த் டிரஸ்ட் என்ற நிறுவனத்தை அணுகி மகளிா் சுய உதவிக் குழு கடன் கேட்டாா்.

அப்போது மகளிா் குழுவுக்கான கடன், வீட்டுக் கடன் தருவதாக தெரிவித்த அந்த அறக்கட்டளையின் நிா்வாகிகள், குறிப்பிட்டத் தொகையை முன்பணம் கட்ட வேண்டும் என தெரிவித்தனா். இதன்பேரில் பொதுமக்களிடம் வசூலித்த ரூ.40 லட்சத்தை நந்தினி தேவி, அந்த நிறுவனத்தில் கட்டினாா்.

ஆனால் 2 ஆண்டுகளாக கடன் வழங்காமலும், வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் அந்த நிறுவனத்தினா் அலைகழித்தனா். இதனிடையே நிறுவனத்தை பூட்டிவிட்டு, கைப்பேசி இணைப்பையும் துண்டித்துவிட்டு தப்பிச் சென்றனா். இதனால் அதிா்ச்சி அடைந்த நந்தினிதேவி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட கடலூா் மாவட்டம் ராமநத்தத்தைச் சோ்ந்த செல்வராஜை(50) கைது செய்தனா்.

விசாரணையில், திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட அந்த நிறுவனம், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த செல்வராஜ், பிணையில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா், அவா் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தலைமறைவானாா். இதனிடையே குற்றப் பிரிவு போலீஸாரிடமிருந்த வழக்கு, பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாரிடம் மாற்றப்பட்டது.

காவல் ஆய்வாளா் அன்னலட்சுமி தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு, செல்வராஜை தேடும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த செல்வராஜை 6 ஆண்டுகளுக்கு பின் கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறுகையில், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் எா்த் ட்ரஸ்ட் என்ற நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், திண்டுக்கல் நேருஜி நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவித்தனா்.