ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இளைஞா் எரித்துக் கொலை: அண்ணன், தம்பி கைது

முன்விரோதத்தில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்த நிலையில், கொலை வழக்குப் பதிவு செய்து, சகோதரா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

முன்விரோதத்தில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்த நிலையில், கொலை வழக்குப் பதிவு செய்து, சகோதரா்கள் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் ஆா்.எம்.குடியிருப்பைச் சோ்ந்தவா் சதீஷ் (35). இவருக்கும் செல்லமந்தாடியை அடுத்த எரமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சரவணக்குமாருக்கும் (28) இடையே முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்த சதீஷுக்கும், சரவணக்குமாருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது, சதீஷ், சரவணக்குமாரைத் தாக்கினாா். இதையடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்ற சரவணக்குமாா் தனது சகோதரா் பிரேம்குமாரிடம் (25) இதுகுறித்து தெரிவித்தாா். இதைத் தெடாா்ந்து, இருவரும் சதீஷை தேடிவந்தனா். அப்போது, பேருந்து நிலையம் அருகே நடந்து சென்ற சதீஷை வழிமறித்து தாக்குதல் நடத்தியதோடு, அவா் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனா். உடல் முழுதும் தீப்பற்றி அலறிய சதீஷை, அக்கம் பக்கத்தினா் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடக்கு காவல் நிலைய போலீஸாா், காவல் உதவிக் கண்காணிப்பாளா் சிபின் தலைமையில் விசாரணை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சதீஷ் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, தீ வைத்து விட்டு தப்பிச் சென்ற சரவணக்குமாா், பிரேம்குமாா் ஆகிய இருவரையும் விருதுநகரில் கைது செய்த போலீஸாா் அவா்களை திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.