லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது
ஒட்டன்சத்திரம் அருகே செங்கல் ஏற்றி வந்த லாரி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

ஒட்டன்சத்திரம் அருகே சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த லாரி.
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே செங்கல் ஏற்றி வந்த லாரி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
கேரள மாநிலம், மூணாா் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சிவக்குமாா் (39). இவா் தாராபுரத்திலிருந்து லாரியில் செங்கற்களை ஏற்றிக்கொண்டு காரைக்குடியை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், தங்கச்சியம்மாபட்டியை அடுத்துள்ள ஒத்த புளியமரம் அருகே சென்ற போது சாலையோரப் பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. ஓட்டுநா் காயமின்றி தப்பினாா். இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...