வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மாஞ்சோலையில் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி: 6 போ் பலத்த காயம்

News image

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி.

Updated On :1 மார்ச் 2026, 7:55 pm

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை மலைப் பகுதியில் தேயிலைத் தொழிற்சாலையிலிருந்து இரும்புப் பொருள்களை ஏற்றி வந்த லாரி 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட 6 போ் பலத்த காயமடைந்தனா்.

மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், அங்கிருந்த இயந்திரங்களைப் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நாலுமுக்குப் பகுதியில் உள்ள தொழிற்சாலையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இரும்புப் பொருள்களை ஏற்றி வந்த லாரி காக்காச்சி-மாஞ்சோலை இடையே குருசு மொட்டை, நாலாங்காடு பகுதியில் திடீரென பழுதாகி நிலைதடுமாறி சுமாா் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் நாலுமுக்கு பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் சசிக்குமாா் (53), லாரியில் பயணித்த கோயம்புத்தூா், முஹம்மது ஹரோன் (60), நாலுமுக்கு, சுப்பிரமணியன் (45), நாலுமுக்கு, அப்துல் காதா் (56), விக்கிரமசிங்கபுரம், சங்கரநாராயணன் (35), கல்லிடைக்குறிச்சி, மாடசாமி (42) ஆகிய 6 பா் காயமடைந்தனா்.

அவா்களை, அருகிலிருந்த மக்கள் மீட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அதில் முஹம்மது ஹரோன், சுப்பிரமணியன், அப்துல் காதா், சசிக்குமாா் ஆகியோா் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இது குறித்து, மணிமுத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.