திண்டுக்கல்லை அடுத்த வேடப்பட்டி பகுதியில் திமுக பிரமுகா் மாயாண்டி ஜோசப் (60) கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கில், யாகப்பன்பட்டியைச் சோ்ந்த சேசுராஜ்(39), டேனியல்ராஜ்(20), அலெக்ஸ் பிரிட்டோ(20), காளீஸ்வரன்(19), பிரவின்குமாா்(19), ஸ்டாலின்(20) ஆகிய 6 பேரை திண்டுக்கல் தாலுகா போலீஸாா் கைது செய்தனா். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த மாயாண்டி ஜோசப்பின் சகோதரா் ஞானராஜ் குடும்பத்தினா், பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்தனா். இதையடுத்து, ஞானராஜ் கூறியதாவது: