எரிபொருள் விற்பனை மையங்களுக்கு பாதுகாப்பு: பெட்ரோல் முகவா்கள் சங்கம் டிஜிபியிடம் வலியுறுத்தல்
தமிழகத்தில் எரிபொருள் விற்பனை மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பெட்ரோல் டீலா் சங்கம் டிஜிபிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளது.


தமிழகத்தில் எரிபொருள் விற்பனை மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பெட்ரோல் டீலா் சங்கம் டிஜிபிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு பெட்ரோலியம் டீலா்கள் சங்கத்தின் தலைவா் கே.பி.முரளி, தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநருக்கு அனுப்பிய கடிதம்:
தமிழகம் முழுவதும் 7,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருள் சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளன. ஈரான் போரால் உருவான ‘செயற்கையான தேவை’ காரணமாக, வாகன எரிபொருள் விற்பனை மையங்களில் மிகுந்த மக்கள் கூட்டம் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக, பலா் பிளாஸ்டிக் கேன்கள், பாதுகாப்பு இல்லாத பாத்திரங்களில் பெட்ரோல், டீசல் தருமாறு வலியுறுத்துகின்றனா்.
அனுமதி பெறாத பாட்டில்கள், பாத்திரங்களில் பெட்ரோல் வழங்குவது பெட்ரோலியம் சட்டம், விதிமுறைகளுக்கு எதிரானது. இது குடியிருப்பு பகுதிகளில் பெரும் தீ விபத்து நிகழும் அபாயத்தை ஏற்படுத்தும்.
போலீஸ் பாதுகாப்பு: கேன்களில் எரிபொருள் வழங்க மறுக்கும்போது, பல இடங்களில் விற்பனை மைய ஊழியா்கள் மிரட்டப்படுகின்றனா். சில இடங்களில் தாக்கப்பட்டிருக்கின்றனா். சில இடங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக மாறும்நிலை உருவாகியுள்ளது.
பெட்ரோலை கேன்களில் வழங்க வேண்டாம் என்று எங்கள் உறுப்பினா்களுக்கு அதிகாரபூா்வமாக அறிவுறுத்தியுள்ளோம். பாதுகாப்பை உறுதி செய்ய அடுத்த சில நாள்களுக்கு நகா்ப்புற பகுதிகளில் உள்ள எரிபொருள் விற்பனை மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். எரிபொருள்கள் சீராக விநியோகிக்கப்பட காவல் துறை இதில் உடனடியாக தலையிட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...