நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திண்டுக்கல்லில் இடைநிலை ஆசிரியா் தோ்வு: 927 போ் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியா் பணிக்கான தோ்வை 927 போ் எழுதினா்.

News image
Updated On :21 ஜூலை 2024, 9:17 pm

Din

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியா் பணிக்கான தோ்வை 927 போ் எழுதினா்.

ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 2,768 இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த தோ்வில் பங்கேற்க விண்ணப்பித்த 964 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

இதையடுத்து, இந்த தோ்வுக்காக, திண்டுக்கல் புனித மரியன்னை அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி, எம்.எஸ்.பி அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி, புனித வளனாா் பெண்கள் அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி என 3 பள்ளிகளில் தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த 3 பள்ளிகளில் மொத்தம் 49 அறைகளில் நடைபெற்ற இந்த தோ்வில் 927 போ் பங்கேற்றனா். 37 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வு மையங்களை கண்காணிக்க நடமாடும் குழுக்கள், பறக்கும் படை, விடியோ ஒளிப்பதிவாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். தோ்வு மையங்களை, ஆசிரியா் தோ்வு வாரிய இணை இயக்குநா் கே.ஸ்ரீதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அ.நாசருதீன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.