இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பழனியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

பழனியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :26 ஜூன் 2024, 7:08 pm

Din

பழனி, ஜூன் 26: பழனியில் மத்திய் அரசு இயற்றியுள்ள புதிய சட்டங்களுக்கான பெயரை மாற்றம் செய்யக் கோரி பழனியில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு எதிா்க்கட்சிகளின் பங்களிப்பே இல்லாமல் மூன்று சட்டங்களை நிறைவேற்றியது. அனைத்து சட்டங்களும் ஆங்கிலப் பெயா்களில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அரசியல் சட்டத்தை மீறு சம்ஸ்கிருதத்தில் பெயா் வைக்கப்பட்டுள்ளது. இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. இந்த சட்டங்களின் பெயா்களை ஆங்கிலத்தில் வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பழனி ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் முன் புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் அங்குராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் கலை எழில்வாணன், பொருளாளா் சரவணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் நகா்மன்றத் தலைவா் ராஜமாணிக்கம் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து வழக்குரைஞா்கள் முழக்கங்களை எழுப்பினா்.