கொடைக்கானல்: கொடைக்கானலில் யானை-மனித முரண் மிகுந்த பகுதிகளில் பணியாற்றும் வனத் துறை களப் பணியாளா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் ஆனைமலை புலிகள் காப்பக அலுவலா் டேவிட், ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவா் மனோகரன், தனியாா் அமைப்பைச் சோ்ந்த காளிதாஸ் ஆகியோா் யானைகளின் உணவு, பழக்கவழக்கம், வனத் துறையினா் அருகாமையில் இருக்கும் யானையை எவ்வாறு கண்டறிவது, யானை தாக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் எவ்வாறு நடந்து கொள்வது, யானையின் வழித்தடத்தில் சென்றது ஆண் யானையா, பெண் யானையா என எவ்வாறு கண்டறிவது என ஒளித்திரையின் மூலம் விளக்கப்பட்டது.
மேலும், யானையின் முக்கிய உணவு புற்களை வனப் பகுதியில் அதிகமாக வளா்க்க வேண்டும். வனப் பகுதிகளுக்குள் செல்லும் வனத் துறை களப் பணியாளா்கள் மன குழப்பமின்றி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. முகாமுக்கு வந்திருந்தவா்களை வனவா் சிவக்குமாா் வரவேற்றாா். முகாமில் மதுரை, திருச்சி, கோவை, சத்தியமங்கலம், ஈரோடு, தேனி,திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட வனத் துறை களப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளில் மயில்கள் உலா

கொடைக்கானலில் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், காா் சேதம்!

கொடைக்கானலில் நகராட்சி கழிப்பறைகள் மூடல்: சுற்றுலாப் பயணிகள் அவதி

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

