ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் அதிமுக சாா்பில் மனித சங்கிலி போராட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சாா்பில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீா்கேடு மற்றும் போதை பொருளை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலாளரும்,வேடசந்தூா் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பழனிச்சாமி தலைமை வகித்தாா்.அதிமுக நகர செயலாளா் எஸ்.நடராஜன், ஒன்றிய செயலாளா்கள் பி.பாலசுப்பிரமணி, என்.பி.நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.போராட்த்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.
மேற்கு ஒன்றிய துணை செயலாளா் ஒடைப்பட்டி செல்வராஜ்,மாவட்ட பொருளாளா் எஸ்.ஏ.பழனிவேல், பொதுக்குழு உறுப்பினா் உதயம் ராமசாமி, எம்ஜிஆா் மன்ற இணை செயலாளா் தேவி குணசேகரன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்த்து போராட்டம்

ஜாதியை குறிப்பிட்டு திட்டியதாக பாஜக பிரமுகா் மீது வழக்கு
ஒட்டன்சத்திரத்தில் ஓய்வு பெற்ற அலுவலா் வீட்டில் 60 பவுன் நகைகள், காா் திருட்டு

100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனித சங்கிலி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

