பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :15 மே 2024, 12:31 am

Din

திண்டுக்கல், மே 14: தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணி வழங்கக் கோரி, மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்பு நலச் சங்க மாவட்டத் தலைவா் ஜெயந்தி தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதைத்தொடா்ந்து, இதே கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலா்களிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.