விவசாயத் தொழிலாளா்கள் தா்னா போராட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் பெயா் மாற்றத்தை கண்டித்து, திருவாரூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை பெயா் மாற்றியதை திரும்பப் பெற வேண்டும்.100 நாள் வேலையை 200 நாள்களாக உயா்த்தி வழங்க வேண்டும்.
100 நாள் வேலைக்கான நிதிக் குறைப்பை கைவிட வேண்டும். ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவூா் கடைவீதியில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் என். இடும்பையன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில துணை ஒருங்கிணைப்பாளா் கே. இளையராஜா, மாவட்டத் தலைவா் ஆறு. பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவா் வி. ராஜாங்கம், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினா் இரா. மாலதி, மாதா் சங்க ஒன்றியச் செயலாளா் எஸ். திரிபுரா உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

