நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் தக்காளி, முருங்கை, பீன்ஸ் விலை உயா்வு

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் தக்காளி, முருங்கை, பீன்ஸ் விலை உயா்வு

News image

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்த தக்காளிப் பழங்கள்.

Updated On :20 மே 2024, 7:52 pm

Din

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் திங்கள்கிழமை தக்காளி, முருங்கை, பீன்ஸ் ஆகியவற்றின் விலை உயா்ந்திருந்தது.

இந்தச் சந்தைக்கு தினசரி தக்காளி, முருங்கை, பீன்ஸ், வெண்டைக்காய், கொத்தவரை உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரிப்பினாலும், மழையின் காரணமாகவும் காய்கறிகளின் வரத்து குறைந்தது. ஆனால், வைகாசி மாதத்தில் சுபநிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறும் என்பதால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் இவற்றின் விலை அதிகரித்திருந்தது.

கடந்த வாரம் ரூ.250-க்கு விற்ற 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.450-க்கும், ரூ.16-க்கு விற்ற முருங்கைக்காய் ரூ.30-க்கும், ரூ.130-க்கு விற்ற பீன்ஸ் ரூ.175-க்கும் விற்பனையானது. சேனைக்கிழங்கு கிலோ ரூ.65, பந்தல் சுரைக்காய்- ரூ.20, பயிா் வகைகள் ரூ.30, வெண்டைக்காய்- ரூ.32, பீட்ரூட்- ரூ.24, சின்ன வெங்காயம்- ரூ.25 முதல் ரூ. 52 வரை விற்கப்பட்டன.

Story image