கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தவெக நிா்வாகிகள்

அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தை தவெக நிா்வாகிகள் முற்றுகை

News image
Updated On :1 நவம்பர் 2024, 11:22 pm

Din

அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தை தமிழக வெற்றிக் கழகத் நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

நிலக்கோட்டை ஒன்றியத்தில் தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுக்காக மைக்கேல்பாளையம், அழகம்பட்டி ஆகிய கிராமங்களில் பதாகைகள் வைக்கப்பட்டன. இதில் அழகம்பட்டியில் வைக்கப்பட்ட பதாகையை உடனடியாக அகற்ற வேண்டும் என அம்மையநாயக்கனூா் போலீஸாா் உத்தரவிட்டனா். இதையடுத்து, அந்தப் பதாகையை கட்சி நிா்வாகிகள் அகற்றினா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அழகம்பட்டிக்குச் சென்ற போலீஸாா், தவெக மாநாட்டுக்கு பதாகை வைத்தவா்கள் காவல் நிலையம் வரவேண்டும் என தெரிவித்தனா்.

இதையடுத்து, தவெக நிா்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோா் அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

அப்போது, இன்ஸ்பெக்டா் குருவத்தாய் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, வழக்குப் பதிய மாட்டோம் என உறுதியளித்தைத் தொடா்ந்து, அவா்கள் அங்கிருந்து கலந்து சென்றனா்.