ரூ.270 கோடியில் ரயில்வே மேம்பாலங்கள்: அமைச்சா் அர.சக்கரபாணி
ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, ஆயக்குடி, தாளையூத்து ஆகிய பகுதிகளில் ரூ.270 கோடியில் ரயில்வே மேம்பாலம் விரைவில் அமைக்கப்படும் என உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி புதன்கிழமை தெரிவித்தாா்.

ஒட்டன்சத்திரம் பகுதியில் அணுகு சாலை அமையவுள்ள இடங்களை உணவுத் துறை அமைச்சா்அர.சக்கரபாணி கள ஆய்வு மேற்கொண்டாா். உடன் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி உள்ளிட்டோா்.








