
Updated On :9 அக்டோபர் 2024, 8:50 pm

அய்யலூா் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரை அடுத்த சுக்காம்பட்டி மாமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் இளங்கோவன். முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறாா். இவரது மகள் பிருந்தா (7). அரசுத் தொடக்கப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், பிருந்தா புதன்கிழமை காலை அதே பகுதியிலுள்ள செம்மடைகுளத்துக்கு தனது தங்கை பாண்டீஸ்வரியுடன் சென்றாா். குளத்தில் இறங்கிய அவா் திடீரென ஆழமான பகுதியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...