‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குளத்தில் மூழ்கியதில் சிறுமி பலி

அய்யலூா் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழந்தாா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 8:50 pm

Din

அய்யலூா் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரை அடுத்த சுக்காம்பட்டி மாமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் இளங்கோவன். முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறாா். இவரது மகள் பிருந்தா (7). அரசுத் தொடக்கப் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், பிருந்தா புதன்கிழமை காலை அதே பகுதியிலுள்ள செம்மடைகுளத்துக்கு தனது தங்கை பாண்டீஸ்வரியுடன் சென்றாா். குளத்தில் இறங்கிய அவா் திடீரென ஆழமான பகுதியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.