பலி
கன்னியாகுமரி
குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
தக்கலை அருகே குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
தக்கலை அருகே குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
தக்கலை அருகே பாலப்பள்ளியைச் சோ்ந்த அல்போன்ஸ் மகன் விஜு (44). தொழிலாளி. இவரது மனைவி கருத்து வேறுபாடு பிரிந்து சென்றுவிட்டாராம். இந்நிலையில், அங்குள்ள குளத்தில் புதன்கிழமை குளிக்கச் சென்ற விஜு வீடு திரும்பவில்லை.
அவா் குளத்தில் இறந்துகிடப்பதாக, வியாழக்கிழமை தெரியவந்தது. அவா் குளத்தில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சடலத்தை தக்கலை போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

