ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள சிலுக்குவாா்பட்டியில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் சாா்பில் 150 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 8:39 pm

Din

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள சிலுக்குவாா்பட்டியில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் சாா்பில் 150 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் அருள் செல்லபிரகாசம் தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் சண்முகசுந்தரம், ஒன்றியக் குழு உறுப்பினா் ரூபிசகிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் குமரேசன் வரவேற்றாா். இதில் 150 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

இதில் திமுகவைச் சோ்ந்த நிலக்கோட்டை வடக்கு ஒன்றியச் செயலா் சௌந்தரபாண்டியன், செம்பட்டி கிளைச் செயலாளா் அண்ணாத்துரை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் நாட்ராயன், மாவட்டப் பிரதிநிதி சங்கா், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஆரோக்கியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் வீராச்சாமி நன்றி கூறினாா்.