நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 7:47 pm

Din

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் பிரவீன் (24). பொக்லைன் இயந்திர ஓட்டுரான இவா், திண்டுக்கல் மாவட்டம், இடையக்கோட்டை பகுதியில் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியுடன் பிரவீனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனிடையே, சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், இடையகோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரவீனை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி வேல்முருகன் குற்றஞ்சாட்டப்பட்ட பிரவீனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்தாா்.